சமச்சீர் கல்வி பாடநூல்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.
வாழ்த்து
- மெய் – உடல்
- விதிர்விதிர்த்து – உடல் சிலிர்த்து
- விரை – மணம்
- நெகிழ – தளர
- ததும்பி – பெருகி
- கழல் – ஆண்கள் காலில் அணியும் அணிகலன் (இங்கு ஆகுபெயராய் இறைவனின் திருவடியைக் குறித்தது)
- சயசய – வெல்க வெல்க
இலக்கணக்குறிப்பு
- விடேன் – தன்மை ஒருமை வினைமுற்று
பகுபத உறுப்பிலக்கணம்
- போற்றி – போற்று + இ. போற்று – பகுதி, இ –வினையெச்ச விகுதி.
- மாணிக்கவாசகர் சைவ சமயக்குரவர் நால்வருள் ஒருவர்.
- மாணிக்கவாசகர் பிறந்த ஊர் திருவாதவூர்
- திருவாதவூர் மதுரைக்கு அருகில் உள்ளது.
- மாணிக்கவாசகர் அரிமர்த்தன பாண்டியனிடம் தலைமையமைச்சராகப் பணியாற்றியவர்.
- மாணிக்கவாசகர் தலைமையமைச்சராக பணியாற்றிய மன்னரின் பெயர் அரிமர்த்தன பாண்டியன்.
- பாண்டிய மன்னர் அரிமர்த்தன பாண்டியரிடம் தலைமை அமைச்சராக பணியாற்றியவர் மாணிக்கவாசகர்.
- பாண்டியனுக்காக குதிரை வாங்கச் சென்றவர் மாணிக்கவாசகர்
- குதிரை வாங்க சென்றபொது திருப்பெறுந்துறை இறைவன் திருவருளால் ஆட்கொள்ளப்பட்டவர் மாணிக்கவாசகர்.
- திருப்பெறுந்துறை இறைவனை, மெய்யுருகப் பாடிக் கசிந்து கண்ணீர் மல்க அழுது தொழுதவர் மாணிக்கவாசகர்
- அழுது அடியடைந்த அன்பர் மாணிக்கவாசகர்
- திருப்பெருந்துறை இறைவனை, மெய்யுருகப்பாடிக் கசிந்து கண்ணீர் மல்க தொழுததினால், அழுது அடியடைந்த அன்பர் என்று மாணிக்கவாசகர் அழைக்கப்படுகிறார்.
- திருவாசகமும் திருக்கோவையாரும் மாணியக்கவாசகரால் அருளப்பட்டது.
- மாணிக்கவாசகர் எழுப்பிய கோவில் தற்போது ஆவுடையார்கோவில் என்று அழைக்கப்படுகிறது.
- ஆவுடையார் கோவில் திருப்பெருந்துறையில் உள்ளது.
- மாணிக்கவாசகரின் காலம் கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டு.
- சைவத்திருமுறைகள் பன்னிரண்டனுள் எட்டாம் திருமுறையில் திருவாசகமும் திருக்கோவையாரும் உள்ளன.
- சைவத்திருமுறைகள் பன்னிரெண்டு
- சைவத்திமுறைகளில் எட்டாம்திருமுறையில் திருவாசகமும் திருக்கோவையாரும் உள்ளன.
- திருவாசகத்தில் 658 பாடல்கள் இடம் பெற்றுள்ளது
- திருவாசகம் கல்நெஞ்சையும் கசிந்துருகச் செய்யும்.
- திருவாசகம் கல்நெஞ்சையும் கசிந்துருகச் செய்யுமாதலால், திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்னும் தொடர் வழங்கலாயிற்று.
- திருவாசகத்தின் சிறப்பை உணர்ந்த ஜி யு போப் இதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
- திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் ஜி.யு போப்
- திருவாசகத்திலுள்ள திருச்சதகத்தின் முதற்பாடல் நம் பாடப்பகுதியாக அமைந்துள்ளது.
- திருவாசகத்தில் திரு என்பது நூலின் சிறப்பை உணர்த்த வந்த அடைமொழி
- சதகம் என்பது, நூறு பாடல்களைக் கொண்ட நூலைக் குறிக்கும்.
No comments:
Post a Comment